சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதி மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 03) காலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 49 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் மனல்பாறையை சுற்றியுள்ள பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட 49 கிலோ மற்றும் 380 கிராம் கொண்ட இருபது (20) கேரள கஞ்சா பார்சல்கள் இவ்வாரு கைப்பற்றினர்.

மேலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு 14 மில்லியன் ரூபாவுக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.