இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 செப்டம்பர் 19 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் கடலில் கைது செய்யப்பட்டன.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணியை அதிகரித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2022 செப்டம்பர் 19 ஆம் திகதி இரவு, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து, வட கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் வடக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகொன்று மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொன்டுள்ளனர். அப்போது கரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்றுடன் எட்டு (08) இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் படகில் இருந்த எட்டு (08) இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் இதுவரை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், இருபத்தைந்து (25) இந்திய மீன்பிடிப் படகுகளும், நூற்று எண்பத்தொன்பது (189) இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் வெளிநாட்டு மீனவர்கள் நாட்டுக் கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்ளுர் மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், கடல்சார் சூழலின் பல்லுயிர் சேதத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.