6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் பெறுமதியான 331 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இலங்கையில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று தென்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து அம்பாந்தோட்டை மகா ராவணா கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் தென் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் வீதி பெறுமதியான 331 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் 2022 நவம்பர் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் இன்று (2022 நவம்பர் 7,) காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன போதைப்பொருட்களை பார்வையிடுவதற்காக காலி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இணைந்து நடத்திய இந்த விசேட புலனாய்வு நடவடிக்கையின் பிரகாரம், இலங்கை கடற்படைக் கப்பலான விக்ரம II இலங்கைக்கு தெற்கு கடற்பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது அம்பாந்தோட்டை இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் (சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில்) சந்தேகத்திற்கிடமான வகையில் தென் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பல நாள் உள்ளூர் மீன்பிடிக் கப்பலொன்று கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அங்கு பன்னிரண்டு (12) பைகளில் அடைத்து பலநாள் மீன்பிடி கப்பலில் கவனமாக மறைத்து கொண்டு செல்லப்பட்ட 331 கிலோ 110 கிராம் ஹெராயின் போதைப்பொருள் 300 பொதிகள் பல நாள் மீன்பிடி கப்பல் மற்றும் 06 சந்தேக நபர்களுடன் 2022 நவம்பர் 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் தற்போதைய மொத்த சந்தைப் பெறுமதி 6,622 மற்றும் 13,244 மில்லியன் ரூபாய்களுக்கு இடையில் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை கடலில் மாற்றி நிலத்திற்கு கொண்டு வர தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்று போதைப்பொருள் கடத்தலின் நில வலையமைப்புடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் (03) மற்றும் ஒரு பெண் சந்தேகநபர் கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2022 நவம்பர் 06 ஆம் திகதி நில்வெல்ல, மாத்தறை கடற்பரப்பு மற்றும் நில்வெல்ல கடற்கரை பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையொன்று மூலம் கைது செய்துள்ளனர். இதேவேளை, இந்த சட்டவிரோதச் செயலுடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்களைத் தேடும் மேலதிக நடவடிக்கைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, இந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை, கோட்டேகொட, திக்வெல்ல மற்றும் மாமடல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பொதி, பல நாள் மீன்பிடி படகு, டிங்கி மற்றும் பத்து (10) சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவின் (ஓய்வு) தலையீட்டுடன், பல வெற்றிகரமான போதைப்பொருள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உளவுத்துறை சேவைகளை ஒரு பொதுவான இலக்கை நோக்கித் திரட்டியது. இந்த முயற்சிகளில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் தலைமையில் இலங்கை கடற்படையினர் நாட்டிற்குள் ஊடுருவி வரும் போதைப் பொருட்களைத் தடுப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன், 2022 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 23.12 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வீதி பெறுமதியான போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மீன்பிடி நடவடிக்கை என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான இவ்வாரான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும்.