41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரைப் பகுதியில் 2023 மார்ச் மாதம் 10ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 126 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கரையோர வலயத்தில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் கடற்கரையை உள்ளடக்கி கடற்கரையோர கண்காணிப்பு நிலையங்கள் ஊடாக கடலோர வலயத்தை தொடர்ந்து கண்காணித்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ நிருவனத்தின் கடற்படையினரால் 2023 மார்ச் மாதம் 10 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான 04 சாக்குகளை கைப்பற்றியதுடன்., அவற்றில் 55 கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். அதன்படி, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 126 கிலோ 800 கிராம் எடை கொண்டது.

கடற்படையினரின் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் காரணமாக கடத்தல்காரர்களால் கடற்கரையில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 41 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது. மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சா, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.