சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகொன்று கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை, திருகோணமலை, நிலாவெளி கிழக்கு கடற்பரப்பில் 2023 மார்ச் 12 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி கப்பலொன்றுடன் கப்பலில் இருந்த மூன்று (03) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் ரோந்துக் படையணிக்கு சொந்தமான P 4444 விரைவுத் தாக்குதல் படகு மூலம் 2023 மார்ச் 12 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளி கிழக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது. குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த இலங்கையின் பல நாள் மீன்பிடி கப்பலொன்று கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற சந்தேகத்தின் பேரில் மூன்று (03) சந்தேக நபர்களுடன் பல நாள் மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்புவ மற்றும் திருகோணமலை, சீன துறைமுகத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி கப்பலை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.