முல்லைத்தீவு கடலில் மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு, அலம்பில் கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவருடன் (02) இரண்டு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மார்ச் 16 ஆம் திகதி இரவு, கிழக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் கோட்டாபய நிறுவகத்தில் நாயாறு கடற்படைப் பிரிவின் கடற்படையினர் மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் இணைந்து முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அங்கு மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நபர்கள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் இரண்டு (02) படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.