சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

கடற்படை மற்றும் முல்லைத்தீவு கடற்தொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 மார்ச் மாதம் 22 ஆம் திகதி புல்முடே, துடுவ பிரதேசத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று (மார்ச் 22, 2023) கிழக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல்கள் ரன்வேலி நிறுவனத்தைச் சேர்ந்த கடற்படையினர் மற்றும் முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவருடன் ஒரு டிங்கி (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01), மீன்பிடி சாதனங்கள் மற்றும் டிங்கி படகு (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.