கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 மே மாதம் 11 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்று கைது செய்யப்பட்டது.

அதன்படி, கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுச் சோதனை நடவடிக்கையில் வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட வெத்தலக்கேணி கடற்படை முகாமின் கடற்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட பார்சல் ஒன்றில் (01) பொதி செய்யப்பட்ட சுமார் 01 கிலோ 670 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரும் குறித்த மோட்டார் சைக்கிளும் இவ்வாரு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி மதிப்பு சுமார் ரூ.550,000.00 என நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபர் (01) முள்ளியான் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01), கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.