கடல் ஆமை இறைச்சியுடன் 02 சந்தேக நபர்கள் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 மே 22) மன்னார் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு (02) உயிருள்ள ஆமைகள் உட்பட ஆமை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, தீவைச் சுற்றியுள்ள கரையோர பகுதிகளை உள்ளடக்கி நிறுவப்பட்ட கடலோர கண்காணிப்பு நிலையங்கள் மூலம் கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிருவனத்தின் அரிப்பு கரையோர கண்காணிப்பு நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நான்கு (04) கடல் ஆமைகளை கொன்று இறைச்சிக்காக தயார் செய்து கொண்டிருந்த இருவர் (02), சுமார் 206 கிலோகிராம் கடல் ஆமை இறைச்சி, இரண்டு கடல் ஆமைகள் (02) மற்றும் ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தெப்பம் வகை சிறிய படகொன்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 37 வயதுடைய அரிப்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த இரண்டு சந்தேகநபர்கள் (02), இரண்டு கடல் ஆமைகள் (02), சுமார் 206 கிலோ கிராம் எடையுள்ள கடல் ஆமை இறைச்சி மற்றும் தெப்பம் வகை சிறிய படகு மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், அழிந்து வரும் விலங்கினங்களான இந்த கடல்ஆமைகள் பாதுகாக்கும் வகையில், இலங்கை கடற்படை கடல் ஆமை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றதுடன் குறித்த திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகளில் இருந்து பிறக்கும் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடுவித்துள்ளது. இத்தகைய செயல்பாடுகள் மூலம் கடல் உயிரி-சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க, கடற்படை சிறப்பு பங்களிப்பை வழங்குகிறது.