மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் முல்லைத்தீவு நயாறு, அலம்பில் கடற்பரப்பில் மற்றும் புல்முடே கோகிளாய் கடல் பிரதேசத்தில் மற்றும் கொக்கிளாய் தடாகம் பகுதியில் 2023 மே 22 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் மின் விளக்குகள் மற்றும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த பதினாறு (16) நபர்களுடன் 07 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மே 22 ஆம் திகதி காலை, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கோட்டாபய நிருவனத்தின் கடற்படையினர் முல்லைத்தீவு நயாறு மற்றும் அலம்பில் கடல் பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். குறித்த கடற்பகுதிகளில் சட்டவிரோதமாக மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பத்து (10) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், 2023 மே மாதம் 22 ஆம் திகதி காலை, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரன்வேலி நிறுவனத்தின் கடற்படையினர் புல்முடே கொக்கிளாய் பகுதி மற்றும் கொக்கிளாய் தடாகம் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின் விளக்குகளை பயன்படுத்தி மற்றும் செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆறு (06) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், கொக்கிளாய், பதவி ஸ்ரீபுர, வெலிஓய மற்றும் மதுரங்குளிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட பதினாறு பேர் (16), ஏழு டிங்கி படகுகள் (07) மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் குச்சவெளி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.