மின் விளக்குகளை பயன்படுத்தி வட கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 06 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் சலை கடற்பரப்பில் இன்று (2023 மே 24,) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) பேருடன் ஆறு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்தி சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று (2023 மே 24,) காலை, வடக்கு கடற்படை கட்டளையின் சுண்டிக்குளம் மற்றும் சலை கடற்படை பிரிவுகள் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் சலை பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மெற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கடற்பகுதிகளில் சட்டவிரோதமாக மின் விளக்குகளை பயன்படுத்திய ஆறு (06) பேருடன் ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகள் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு, மதுரங்குளிய, கணேசபுரம் மற்றும் முள்ளியான் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் குறித்த ஆறு (06) பேர், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.