தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலியில் இருந்து சுமார் 460 கடல் மைல் (சுமார் 851 கிமீ) தொலைவில், இலங்கைக்கு தென்மேற்கு ஆழ்கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 மே 26) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2023 மே 23 ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு (06) மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ‘Krevin Baba 01’ (பதிவு எண். IMUL-A-0921 CHW) பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர் காலியில் இருந்து இலங்கைக்கு தென் மெற்கு ஆழ்கடல் பகுதியில் திடீரென நோய்வாய்ப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை உடனடியாக ஏற்றுக்கொண்ட கடற்படையினர், தென் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த விஜயபாகு என்ற இலங்கை கடற்படைக் கப்பலை, அப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி, தற்போதுள்ள கடல் சீற்றத்தை எதிர்கொண்டு பெரும் முயற்சியுடன் 2023 மே 24 ஆம் திகதி காலியில் இருந்து சுமார் 460 கடல் மைல் (சுமார் 851 கி.மீ) தொலைவில் நோய்வாய்ப்பட்ட மீனவரை குறித்த கப்பலால் மீட்கப்பட்ட பின் முதலுதவி வழங்கி இன்று (2023 மே 24) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.