நடவடிக்கை செய்தி

MT New Diamond கப்பலின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு படுத்த ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை பேரழிவு மேலாண்மை குழுக்கள் இன்று (2020 செப்டம்பர் 09) வெற்றிகரமாக கட்டுப்படுத்தின. அதன்படி, பேரழிவை எதிர்த்துப் போராடுவதற்காக கப்பலின் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தின் மூன்று (03) வல்லுநர்கள் பேரழிவிற்குப் பிறகு முதல்முறையாக கப்பலில் ஏறியதுடன் அவர்கள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு குறித்த கப்பலை விட்டு வெளியேறினர். இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் நிபுணர்களின் குழுவும் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு ஏறி அடுத்த நடவடிக்கைகளுக்கு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன் கப்பலின் தற்போதைய சேதம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களினால் விளக்கப்படும்.

09 Sep 2020

செய்தி வெளியீடு


பாதகமான வானிலை காரணமாக “MT New Diamond“ கப்பலில் பரவிய தீ ஒருங்கிணைந்த பேரழிவு மேலாண்மை குழுவின் நடவடிக்கைகளினால் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது

பாதகமான வானிலை காரணமாக 2020 செப்டம்பர் 07 அன்று MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீ இன்று விடியற்காலையில், பேரழிவு முகாமைத்துவ குழுக்களால் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் இருந்து இதுவரை தீப்பிழம்புகள் அல்லது புகை எதுவும் காணப்படவில்லை, மேலும், ஒரு டக் படகைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட கப்பல் மீண்டும் ஆழ்கடலுக்கு இழுக்கப்படுகின்றன. அதன்படி, பாதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் இப்போது சங்கமங்கந்த பகுதியில் இருந்து சுமார் 37 கடல் மைல் தொலைவில் உள்ளதுடன் கரடுமுரடான கடல் சூழ்நிலையில் மற்றும் பலத்த காற்று மத்தியில் இந்த பேரழிவு மேலாண்மை நடவடிக்கை தொடர்கிறது.

09 Sep 2020

செய்தி வெளியீடு


சீரற்ற வானிலை காரணமாக “MT New Diamond“ கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வர கூட்டு பேரழிவு மேலாண்மை குழு நடவடிக்கையைத் தொடர்கிறது

பாதகமான வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது., மேலும் தீயணைப்பு இரசாயன மற்றும் தண்ணீரை இங்கு பயன்படுத்துகின்றன.

08 Sep 2020

கடற்படை நடவடிக்கைகள் மூலம் 12 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

புத்தலம், குரின்னம்வெட்டே பகுதியில், திருகோணமலை பேருந்து நிலையம் அருகில் மற்றும் சீதுவ பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 12 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா வைத்திருந்த 06 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

08 Sep 2020

கடற்படையின் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் பல வெடிபொருட்கள் மீட்பு

கடற்படை சமீபத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது முல்லைதீவு உதயார்கட்டு பகுதியில் மற்றும் மஹவெலி ஆற்றின் கடுகஸ்தொடை கஹல்ல பகுதியில் மணல் அகழ்வாராய்ச்சி இடத்தில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

08 Sep 2020

“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1800 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

சீரற்ற வானிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் பிற பங்குதாரர்களுக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள் மற்றும் டக் படகுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த தீ விபத்து நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

08 Sep 2020

“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1630 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

MT New Diamond எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்றைய தினம் சுமார் 1500 மணியளவில் பேரழிவு மேலாண்மை குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கப்பலின் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களினால் தீ மீண்டும் வருவதைத் தடுக்க இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி பேரழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

07 Sep 2020

செய்தி வெளியீடு


“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 07 அன்று 1230 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்திய பின்னர், இலங்கை கடற்படை உள்ளிட்ட பேரழிவு நிவாரண குழுக்கள் தொடர்ந்து ரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கப்பலின் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

07 Sep 2020

செய்தி வெளியீடு


“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 06 அன்று 1830 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை முந்தைய நாள் (2020 செப்டம்பர் 6,) மாலை 1500 மணியளவில் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களால் முடிந்தது. இருப்பினும், கப்பலுக்குள் அதிக வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மீண்டும் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காரணத்தினால் பேரழிவு மேலாண்மைக்கு அனுப்பப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கப்பலை குளிர்விக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

07 Sep 2020

செய்தி வெளியீடு


New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது

MT New Diamond என்ற கச்சா எண்ணெய் கப்பல் குவைத்தின் மீனா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாரதீப் துறைமுகத்திற்கு 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சென்று கொண்டிருந்த பொது 2020 செப்டம்பர் 3, அன்று காலை 0800 மணியளவில் இலங்கைக்கு கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளாகியது. அந்த நேரத்தில், கப்பல் சங்கமங்கந்த பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்தபோது, கப்பலின் பிரதான இயந்திர அறையில் உள்ள ஒரு கொதிகலனில் வெடிப்பில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

06 Sep 2020