நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 06 ஆம் திகதி புத்தலம், செரக்குலிய கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Mar 2021

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 04 ஆம் திகதி மற்றும் இன்று (2021 மார்ச் 05) அதிகாலை சிலாவத்துர, மனல்குளம்,நொரொச்சோலை மற்றும் பூலாச்செனை பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2217 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Mar 2021

ரூபா 06 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் ஊருமலை கடலோரப் பகுதியில் 2021 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 01 கிலோ மற்றும் 21 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2021

18 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை 2021 மார்ச் 01 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டு 18 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை மீட்டது.

02 Mar 2021