நடவடிக்கை செய்தி

கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை 2021 மே 21 ஆம் திகதி திருகோணமலை பகுதியில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டதுடன், அப்பொது சுமார் 01 கிலோ மற்றும் 790 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

22 May 2021

வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களில் சிக்கிய குப்பை கூளங்கள் கடற்படையினரால் அகற்றப்பட்டது

கின் கங்கை குறுக்கே உள்ள வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2021 மே 21 ஆம் திகதி ஈடுபட்டுள்ளனர்.

22 May 2021

“கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி” என்ற தலைப்பின் கீழ் 2021 மே 21 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் 2021 மே 20 அன்று ஏற்பட்ட தீ விபத்தை இன்று (2021 மே 22) இலங்கை கடற்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

22 May 2021

கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை 2021 மே 20 ஆம் திகதி மன்னார் பகுதியில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டதுடன், அப்பொது விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்ட சுமார் 01 கிலோ மற்றும் 450 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.

21 May 2021

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்ட கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் 2021 மே 20 அன்று பகல் தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் சிந்துரல என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் துரித தாக்குதல் படகொன்று குறித்த பகுதிக்கு அனுப்பியது. தற்போது, இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான ஒரு இழுபறி படகும் (01) இணைக்கப்பட்டுள்ளது.

21 May 2021

கடற்படை நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகின்றன

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ள அவசரநிலைகளின் விளைவாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க மேலும் 02 கடற்படை நிவாரண குழுக்கள் இன்று (2021 மே 15) கம்பஹ மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

15 May 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மேலும் மூன்று கடற்படை நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டன

நிலவும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (2021 மே 14) மாலை கம்பஹ மற்றும் காலி மாவட்டங்களுக்கு மேலும் மூன்று கடற்படை நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

14 May 2021

சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 30 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து 2021 மே 13 மற்றும் 14 திகதிகளில் சிலாபம், சமிதுகம பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 30 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

14 May 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கடற்படை நிவாரண குழுக்களால் மீட்பு

நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இதேவேளை, தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அவசர நிலைமைகளுக்கு உதவும் வகையில் 10 கடற்படை நிவாரணக் குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்படி, 2021 மே 13 ஆம் திகதி இரவு காலி உடுகம பகுதியில் உள்ள கிங் கங்கை நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 06 பேரை கடற்படை நிவாரண குழுக்கள் மீட்டுள்ளது.

14 May 2021

காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட பல பகுதிகளில் கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன

காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட நாகொட மற்றும் தவலம பிரதேச செயலகங்களுக்கு கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் நான்கு குழுக்கள் நிறுவ இன்று (2021 மே 13) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

13 May 2021