நடவடிக்கை செய்தி

பாதிக்கப்பட்ட MV X-PRESS PEARL கப்பலின் விசாரண நடவடிக்கைகளுக்காக கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் உதவி

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட போது தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலை குறித்து விசாரணை நடத்தி வரும் அரசு அதிகாரிகளின் குழுவை இன்று (2021 ஜூன் 04) கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு இலங்கை கடலோர காவல்படையின் 'சமுத்ரக்ஷா' கப்பல் முலம் அழைத்து செல்லப்பட்டது.

04 Jun 2021

வெள்ள அபாயங்கள் குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற வானிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்க தெற்கு மாகாணத்தில் மற்றும் மேற்கு மாகாணத்தில் பல பகுதிகள் உள்ளடக்கி இன்று (2021 ஜூன் 03) கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் 05 நிவாரண குழுக்களை நிறுத்தப்பட்டது.

03 Jun 2021

உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் விதைகள் கடத்தல், 06 சந்தேக நபர்கள் கைது

2021 ஜூன் 02 ஆம் திகதி சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காய விதைகளுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

03 Jun 2021

பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகொன்றில் இருந்த மீனவர்களை மீட்க கடற்படை பங்களிப்பு

இலங்கைக்கு தெற்கு கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகொன்றில் இருந்த மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர இன்று (2021 ஜூன் 02) கடற்படை உதவி வழங்கியது.

02 Jun 2021

தீ பிடித்த MV X-PRESS PEARL கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படை நீர்நிலை பிரிவினால் இயக்கப்படும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கு (NARA) சொந்தமான சமுத்ரிகா (RV SAMUDRIKA) ஆராய்ச்சி கப்பல் MV X-PRESS PEARL கப்பலின் தீ விபத்து மூலம் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 2021 ஜூன் 01 ஆம் திகதி பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதியில் கடல் நீர் மாதிரிகள் சேகரித்துள்ளது.

02 Jun 2021

ரூ .30 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான மற்றொரு கேரள கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இன்று (2021 ஜூன் 01) காலை மாதகல் மாசன்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 101 கிலோ மற்றும் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

02 Jun 2021

ரூ .08 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

2021 ஜூன் 01 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 29 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் இரு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

02 Jun 2021