நடவடிக்கை செய்தி

ரூபா 06 மில்லியன் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் ஊருமலை கடலோரப் பகுதியில் 2021 மார்ச் 03 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 01 கிலோ மற்றும் 21 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2021

18 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை 2021 மார்ச் 01 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டு 18 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை மீட்டது.

02 Mar 2021

பாதிக்கப்பட்ட மீன்பிடி படகொன்று கடற்படையால் மீட்பு

மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகாக சென்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட டிங்கி படகொன்று மற்றும் படகில் இருந்த 02 மீனவர்களை கொழும்பு, கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்தின் உதவியால் இன்று (2021 பிப்ரவரி 27) மீட்கப்பட்டது.

27 Feb 2021

வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து 2021 பிப்ரவரி 24 அன்று திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராகப்பட்ட நீர் ஜெல் மற்றும் பாதுகாப்பு உருகிகள் என அறியப்பட்ட வணிக வெடிபொருட்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

25 Feb 2021

02 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 400 கிலோவுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

2021 பிப்ரவரி 16, அன்று மன்னார் கார்சல் பகுதியிலும், தாவுல்பாடு கடற்கரையிலும் கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, 02 கிலோவுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் (01) மற்றும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 400 கிலோவுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

18 Feb 2021

16 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 பிப்ரவரி 15 அன்று யாழ்ப்பாணம், உடுத்துரை மற்றும் மன்னார், உப்புக்குளம் பகுதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 16 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 Feb 2021

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 பேர் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

2021 ஜனவரி 01 முதல் பிப்ரவரி 15 வரை மேற்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வட-மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் இலங்கை கடற்படை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 பேர், 42 படகுகள் , ஒரு லாரி மற்றும் ஒரு முச்சக்கர வண்டி, பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

15 Feb 2021

மன்னார் மந்தாய் கடற்கரைக்கு அருகிலுள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 67 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

2021 ஜனவரி 29 ஆம் திகதி மன்னார் மந்தாய் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 67 கிலோ மற்றும் 500 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்தது.

30 Jan 2021

சுமார் 31 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மாந்தாய் கடற்கரையில் கடற்படை மீட்டுள்ளது

2021 ஜனவரி 26 ஆம் திகதி மன்னார் மாந்தாய் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது 31 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்தது.

27 Jan 2021

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் கிளைபோசேட் பொதியொன்று கடற்படையினரால் கைது

கல்பிட்டி தலுவ கடற்கரையில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 1340 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 80 கிலோகிராம் கிளைபோசேட் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (ஜனவரி 26, 2021) கைது செய்யப்பட்டனர்.

26 Jan 2021