நடவடிக்கை செய்தி

வெள்ளத்தில் சிக்கிய 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கற்பிட்டி பாலவிய பகுதியில் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படை நிவாரணக் குழுக்களால் 2021 நவம்பர் 08 இரவு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

09 Nov 2021

சீரற்ற காலநிலையின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

தீவை பாதிக்கும் பாதகமான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் 35 கடற்படை நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

08 Nov 2021

காலி பகுதியில் உள்ள பாலங்களில் சிக்கிய கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

காலி கிங் ஆற்றின் குறுக்கே உள்ள முல்கட, அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் 2021 நவம்பர் 03 மற்றும் 4 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

06 Nov 2021

கடலில் காயமடைந்த்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

திருகோணமலையில் இருந்து சுமார் 30 கடல் மைல் (சுமார் 55 கி.மீ) தூரத்தில் கிழக்கு பகுதி கடலில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப கடற்படை இன்று (2021 செப்டம்பர் 26) நடவடிக்கை எடுத்துள்ளது.

27 Sep 2021

சட்டவிரோதமாக கடத்திய வெடிபொருட்களுடன் ஒருவர் நிலாவேலி பகுதியில் கைது செய்யப்பட்டார்

திருகோணமலை, நிலாவேலி, எட்டாம் கட்டை பகுதியில் 2021 செப்டம்பர் 24, அன்று கடற்படை மற்றும் நிலாவேலி காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 27 வணிக ஜெல் குச்சிகள் மற்றும் 500 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களை கொண்டு சென்ற ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

25 Sep 2021

ரூ .27 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2021 செப்டம்பர் 24, அன்று மன்னார் வலைப்பாடு கடலில் மற்றும் கடற்கரையில் நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 91 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

25 Sep 2021

சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற 1175 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன

மன்னார், வன்காலை கடல் பகுதியில் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் 2021 செப்டம்பர் 19 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 1175 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

23 Sep 2021

ரூ .68 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன

இலங்கை கடற்படையினர் 2021 செப்டம்பர் 21, அன்று மன்னார் நரிவில்குளம் கடற்கரையில் நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 228 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

22 Sep 2021

கடற்படையினர் கடந்த 03 நாட்களாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 3704 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படையினரால் மன்னார், சவுத்பார், இருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் மற்றும் மன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 2021 செப்டம்பர் 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 3704 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் 04 உள்ளூர் சந்தேகநபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகும், 06 இந்திய சந்தேக நபர்கள் மற்றும் ஒரு இந்திய (01) படகும் கைது செய்யப்பட்டன.

19 Sep 2021

ரூ. 1575 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான ஹெராயின் போதைப்பொருற்கள் கடத்திய மற்றொரு மீன்பிடி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர் இலங்கையின் தெற்கு சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது 2021 செப்டம்பர் 10 ஆம் திகதி கைது செய்த ரூ. 1575 மில்லியன் மதிப்புள்ள 170 கிலோ 866 கிராம் (பொதிகள் உட்பட) ஹெராயின் போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டு மீன்பிடி கப்பலை அங்கிருந்த 09 வெளிநாட்டு சந்தேக நபர்களுடன் இன்று காலை (2021 செப்டம்பர் 18) கொழும்பு துறைமுகத்திக்கு கொண்டு வரப்பட்டது.

18 Sep 2021