நடவடிக்கை செய்தி

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு அப்பால் கடற்பரப்பில் 2023 ஜூன் 06 ஆம் திகதி பகல் வேளையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு பேர் (07), ஒரு டிங்கி (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.

07 Jun 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கடற்படையின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகள்

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கல, பதுரலிய, லத்பந்துர மற்றும் வலல்லாவிட்ட பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்துக்கும் கடற்படை ஐந்து (05) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதுடன் இன்று காலை (2023 ஜூன் 06) அந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

06 Jun 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்

மோசமான வானிலை காரணமாக மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஜூன் 4 முதல் புலத்சிங்கள, பதுரலிய, லத்பந்துர மற்றும் கலவான ஆகிய இடங்களுக்கு கடற்படை நான்கு (04) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. தற்போது நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

05 Jun 2023

திருகோணமலை மொல்லிப்பொத்தானையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து திருகோணமலை மொல்லிப்பொத்தானை பகுதியில் 2023 ஜூன் மாதம் 01 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கு (01) அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

02 Jun 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதியில் இன்று (2023 ஜூன் 01) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மற்றும் மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தைந்து நபர்கள், ஆயிரத்து அறுபத்தெட்டு (1068) கடல் அட்டைகள், ஏழு (07) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

02 Jun 2023

2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2023 மே 31 ஆம் திகதி இரவு கொழும்பு 11, மல்வத்தை வீதிப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

01 Jun 2023

தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலியில் இருந்து சுமார் 460 கடல் மைல் (சுமார் 851 கிமீ) தொலைவில், இலங்கைக்கு தென்மேற்கு ஆழ்கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 மே 26) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

26 May 2023

மின் விளக்குகளை பயன்படுத்தி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (25 மே 2023) அதிகாலை புல்முடை, அரிசிமலை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரொதமாக மின் விளக்குகளை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

26 May 2023

மின் விளக்குகளை பயன்படுத்தி வட கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 06 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் சலை கடற்பரப்பில் இன்று (2023 மே 24,) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) பேருடன் ஆறு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டது.

24 May 2023

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலைத் தேடும் மற்றும் மீட்கும் பணிக்காக இலங்கை கடற்படை பங்களித்தது

இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்களிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்களின் படி இலங்கை கடற்படைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலுடன் கடற்படையின் சுழியோடி குழவொன்று சீன மீன்பிடி கப்பல் விபத்துக்குள்ளான கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

23 May 2023