நடவடிக்கை செய்தி

மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் முல்லைத்தீவு நயாறு, அலம்பில் கடற்பரப்பில் மற்றும் புல்முடே கோகிளாய் கடல் பிரதேசத்தில் மற்றும் கொக்கிளாய் தடாகம் பகுதியில் 2023 மே 22 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் மின் விளக்குகள் மற்றும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த பதினாறு (16) நபர்களுடன் 07 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 May 2023

காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

கிங்தோட்டை பகுதியில் கடலுக்கு செல்லும் கிங் கங்கை ஊடாக வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2023 மே மாதம் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஈடுபட்டனர்.

23 May 2023

வர்த்தக வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை குச்சவேளி கசீம்நகர் பகுதியில் இன்று (2023 மே 22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிட்டதுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் ஐம்பத்து நான்கு குச்சிகள் (54) மற்றும் ஐம்பது (50) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் ஒரு பெண் (01) கைது செய்யப்பட்டார்.

23 May 2023

கடல் ஆமை இறைச்சியுடன் 02 சந்தேக நபர்கள் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 மே 22) மன்னார் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு (02) உயிருள்ள ஆமைகள் உட்பட ஆமை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 May 2023

உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து 2023 மே 19 ஆம் திகதி கல்பிட்டி ரொட்டபாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 603 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் 11520 ஷாம்பு பாக்கெட்டுகளுடன் (தலா 6 மில்லி) 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 May 2023

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி, சின்னாரிச்சாலை கடற்பரப்பில் 2023 மே 18 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 193 கிலோ கிராம் (ஈரமான எடை) உலர் கடல் அட்டைகள் மற்றும் பல கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02), ஒரு டிங்கி படகு (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

19 May 2023

சுமார் 2800 மில்லியன் ரூபா பெறுமதியான 121 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் தென் கடலில் வைத்து கடற்படையினரால் கைது

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதியில் இருந்து சுமார் 413 கடல் மைல் (சுமார் 764 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 111 கிலோ 606 கிராம் (பொதி எடையுடன்) ஹெரோயின் மற்றும் 10 கிலோ 254 கிராம் ஹஷிஸ் (பொதி எடையுடன்) போதைப்பொருளுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு சந்தேக நபர்கள் 2023 மே 13 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு மூலம் கைது செய்யப்பட்டது. குறித்த போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (2023 மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கைப்பற்றப்பட்ட போதைபொருட்களை நேரில் பார்வையிட்டார்.

19 May 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் காலி, அக்குரஸ்ஸ, கொடபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பிரதேசங்களுக்கு கடந்த 2023 மே மாதம் 14 ஆம் திகதி முதல் கடற்படை நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளதுடன் தற்போது, நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

15 May 2023

சீரற்ற காலநிலையினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

தீவை பாதித்துள்ள மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 மே 14 ஆம் திகதி தெற்கு மாகாணத்தில் சில பகுதிகளில் இலங்கை கடற்படையினர் நிவாரணக் குழுக்களை நிலைநிறுத்தியுள்ளனர்.

15 May 2023

பேருவளை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து இன்று காலை (2023 மே 14) மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீற்றர்) தொலைவில், இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணத்தினால் ஏற்பட்ட கடல் நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்த மீன்பிடிப்படகொன்றில் இருந்த ஆறு (06) மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான CG 208 படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

14 May 2023