நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 44 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு, வலைத்தோட்டம் கடற்பரப்பில் 2022 ஆகஸ்ட் 28 ஆம் திகதி இரவு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

29 Aug 2022

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2022 ஆகஸ்ட் 27 ஆம் திகதி இரவு தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய படகு கைது செய்யப்பட்டன.

29 Aug 2022

வத்தளை புபுதுகம சதுப்பு நிலப்பகுதியில் ஏற்பட்ட அவசர தீயை அணைக்க கடற்படையின் உதவி

வத்தளை புபுதுகம சதுப்பு நிலத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க உதவுமாறு கம்பஹ மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினர் இன்று (2022 ஆகஸ்ட் 26) செய்த அறிவித்தலுக்கு இணங்க, கடற்படையினர் உடனடியாக மூன்று (03) தீயணைப்பு குழுக்களை அனுப்பி வைத்தனர்.

27 Aug 2022

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்று அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்து கடந்த 2022 ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய கடல் எல்லையில் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வந்த அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கு சொந்தமான ஓஷன் சீல்ட் (Australian Border Force Cutter Ship - Ocean Shield) கப்பல் இன்று (2022ஆகஸ்ட் 05) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

05 Aug 2022

காலி பிரதேசத்தில் வெள்ள அபாயத்தை குறைக்கும் வகையில், பாலங்களை அண்மித்த பகுதியில் கடற்படையினரால் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிங் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக காலி பிரதேசத்தில் அகலிய மற்றும் தொடம்கொட பாலங்களை அண்மித்த பகுதியில் சிக்கிய மரக்குற்றிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்றை 2022 ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்டனர்.

04 Aug 2022

சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த சுமார் 34 கிலோ 38 கிராம் (ஈரமான எடை) கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 04) அதிகாலை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளனர்.

04 Aug 2022

சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதி மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஆகஸ்ட் 03) காலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 49 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

04 Aug 2022

திருகோணமலை கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

திருகோணமலை வெளி துறைமுகப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான சிறிய மீன்பிடிப் படகொன்றில் இருந்த மூன்று (03) மீனவர்களை 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

04 Aug 2022

சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை மன்னார் மனல்பாறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 47 கிலோ மற்றும் 240 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

03 Aug 2022

இலங்கை கடற்படையின் 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் இன்று காலை (2022 ஆகஸ்ட் 02) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

02 Aug 2022