நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற போதை மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 நவம்பர் 09,) கல்பிட்டி இரமதீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சித்த 570,000 Pregabalin போதை மாத்திரைகள் அடங்கிய டிங்கி படகு ஒன்றுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Nov 2023

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஜா எல பகுதி மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கப்பட்டது

அண்மையில் பெய்த கடும் மழையினால் ‘ஜா-எல கால்வாய்’ நிரம்பி ஏற்பட்ட வெள்ள நிலைமையின் பின்னர், 2023 நவம்பர் 08 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் ஜா-எலவில் அவசரகால நிவாரண நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. அதன்படி, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கடற்படையின் நிவாரணக் குழுக்கள் முன்வந்தன.

09 Nov 2023

54 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் எழுவத்தீவிற்கு அப்பால் கடற்பகுதியில் 2023 நவம்பர் மாதம் 06 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நூற்று முப்பத்தேழு (137) கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Nov 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 02 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 நவம்பர் 03 ஆம் திகதி மாலை மன்னார், ஒழுதுடுவாய் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) கிலோ நூற்று ஐம்பது (150) கிராம் தங்கத்துடன் 05 சந்தேகநபர்கள், டிங்கி படகொன்று (01), முச்சக்கர வண்டியொன்று (01) மற்றும் மோட்டார் சைக்கிளொன்று (01) கைது செய்யப்பட்டுள்ளது.

04 Nov 2023

காலி தொடம்கொட மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

காலி, பத்தேகமவில், கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொடம்கொட மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் 2023 நவம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

04 Nov 2023

4500 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 219 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரால் கைது

அரச புலனாய்வுப் பிரிவினரால் இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த உளவுத் தகவலின்படி, இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலின் கடற்படையினரால் சுமார் 292 கடல் மைல் (சுமார் 540 கி.மீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது 4500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வீதிப் பெறுமதியான (பொதி எடையுடன்) 219 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள் கைது செய்தனர். இன்று (24 அக்டோபர் 2023) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த போதைப்பொருளை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர்.

24 Oct 2023

கல்பிட்டி மற்றும் புத்தளம் தடாகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் புத்தளம் கல்பிட்டி உச்சமுனிய தடாகப் பகுதியில் மற்றும் புத்தலம் சேரக்குளிய தடாகப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி இரவு நேர சுழியோடி மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேருடன் இரண்டு டிங்கி படகுகள், 740 கடல் அட்டைகள், சுழியோடி உபகரனங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரனங்கள் கைது செய்தனர்.

23 Oct 2023

4728 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 210 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகொன்று காலிக்கு மேற்கே ஆழ்கடலில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின்படி, இலங்கை கடலோர காவல்படையின் சமுத்திரரக்ஷா என்ற கப்பலின் கடற்படையினர் காலிக்கு மேற்கே 91 கடல் மைல் (168 கிமீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்துள்ளனர். குறித்த கப்பலை இன்று (2023 அக்டோபர் 22) காலை தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து கப்பலில் மேற்கொள்ளப்பட்ட உன்னிப்பான சோதனையின் போது 4728 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுமார் 210 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

22 Oct 2023

01 கிலோவுக்கும் அதிகமான TNT உயர் வெடிபொருட்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

யாழ்ப்பாணம் குருநகர் ஜெட்டி பகுதியில் இன்று (2023 ஒக்டோபர் 17) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு (01) கிலோகிராம் TNT உயர் வெடிமருந்துடன் மூன்று (03) அடி நான்கு (04) அங்குலங்கள் கொண்ட பாதுகாப்பு உருகிகள் கைப்பற்றப்பட்டன.

17 Oct 2023

94 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஒக்டோபர் 16) அதிகாலை தலைமன்னார், ஊறுமலை கடற்கரையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) கிலோகிராம் ஐஸ் (Crystal Methamphetamine), ஒரு (01) கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐந்து (5) கிலோகிராம் ஹஷிஸ் 05) கொண்ட டிங்கி படகொன்று (01) கைப்பற்றினர்.

16 Oct 2023