நடவடிக்கை செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 செப்டம்பர் 13 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், ககரதீவு மற்றும் கோவிலன் கலங்கரை விளக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதினேழு (17) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Sep 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டம்பர் 13,) காலை திருகோணமலை சல்லிப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பேருடன் (06) டிங்கி படகு ஒன்றை கைதுசெய்துள்ளனர்.

13 Sep 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 2223 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

புத்தளம் இலந்தடிய கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து மூன்று (2223) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

13 Sep 2023

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 09, 10 மற்றும் இன்று (2023 செப்டெம்பர் 11,) திருகோணமலை, நிலாவேலி மற்றும் கிண்ணியா கடற்பரப்புகளிலும் யாழ்ப்பாணம் சாலைப் பகுதியிலுள்ள கடற்பரப்பிலும் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி, மின் விளக்குகளப் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) நபர்களுடன் 04 டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

11 Sep 2023

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமாக கொண்டுவர முயற்சித்த பீடி இலைகளின் அளவு 6230 கிலோவைத் தாண்டியுள்ளது

2023 ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ள சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பீடி இலைகளின் (Tendu Leaves) அளவு ஆறாயிரத்து இருநூற்று முப்பது (6230) கிலோகிராமை தாண்டியுள்ளதுடன் ஒன்பது சந்தேக நபர்கள் (09) மற்றும் மூன்று டிங்கி படகுகளும் (03) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

06 Sep 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி இரவு திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) நபர்களுடன் இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

05 Sep 2023

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 செப்டெம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை மதுரங்குடா கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் டிங்கி படகொன்று (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர்.

04 Sep 2023

660 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் புத்தளத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் மற்றும் நொரோச்சோலை பொலிஸார் இணைந்து 2023 செப்டெம்பர் 03 ஆம் திகதி புத்தளம், கரம்பே சந்தி வீதித் தடுப்பில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் அறுநூற்று அறுபது (660) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

04 Sep 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், கடைக்காடு கடற்பகுதியில் 2023 செப்டெம்பர் 01 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன் இரண்டு (02) படகுகள் கைது செய்யப்பட்டது.

02 Sep 2023

போதைப்பொருள் கடத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் 05 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

2023 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பதினைந்து (15) மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

31 Aug 2023