நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 29 ஆம் திகதி தலைமன்னார் பழைய பியர் கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நானூற்று எண்பத்தைந்து (485) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

07 Jul 2025

புத்தளம் மற்றும் கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மற்றும் விதைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஜூன் 20 முதல் 30 வரை) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகளுடன் ஒரு (01) லொரியையும், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.

07 Jul 2025

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 ஜூன் 20 முதல் ஜூன் 30 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு (06) டிங்கி படகுகளையும் முப்பத்தொறு (31) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

07 Jul 2025

இலங்கை கடற்படை, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்பரப்பில் ஆபத்தில் இருந்த இந்திய மீன்பிடி படகிலிருந்து நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் 2025 ஜூலை 06 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்டனர்.

07 Jul 2025

கல்பிட்டி கல்லடி கடல் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற 02 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 05 ஆம் திகதி கல்பிட்டி, கல்லடி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட (250 கிலோ) அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இரண்டு (02) நபர்களையும், சுமார் அறுநூற்று எழுபத்து மூன்று (673) கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.

06 Jul 2025

யாழ்ப்பாணத்தின் மாமுனை பகுதியில் ரூ.16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள கேரள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2025 ஜூலை 04) அதிகாலை இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள எழுபத்தொரு (71) கிலோகிராம் நானூறு (400) கிராம் கேரள கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.

04 Jul 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 91 கிலோகிராம் உலர் இஞ்சி கற்பிட்டி கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி, பட்டலங்குண்டுவ பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்படவிருந்து, கடற்படையின் நடவடிக்கைகளினால் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்ட தொண்ணூற்றொன்று (91) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி (ஈரமான எடை) மற்றும் இருநூற்று முப்பத்தெட்டு (238) ஜோடி காலணிகள் கடற்படையினரால் 2025 ஜூலை 03 அன்று கைப்பற்றப்பட்டன.

04 Jul 2025

வென்னப்புவவில் 202 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் (03) மூன்று சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ போலவத்த பகுதியில் 2025 ஜூலை 02 அன்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, தொள்ளாயிரம் 900 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா, இரண்டு (02) வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், நான்கு (04) மகசின்கள், நாற்பது (40) தோட்டாக்கள் ஆகியவற்றை ஏற்றிச்சென்ற ஒரு (01) கெப் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு (01) மோட்டார் காருடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

03 Jul 2025

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 979 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் 2025 ஜூலை 01 அன்று, கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற தொள்ளாயிரத்து எழுபத்தொன்பது (979) கிலோகிராம் உலர் இஞ்சியை ஏற்றி வந்த(03) மூன்று டிங்கிகளுடன் சந்தேகநபர்கள் (03) மூவரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

02 Jul 2025

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 65 புறாக்களுடன் 2 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் நடுக்குடா கடற்கரைப் பகுதியில் 2025 ஜூன் 30 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அறுபத்தைந்து (65) புறாக்களை ஏற்றி வந்த ஒரு டிங்கி (01) படகையும், இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Jul 2025