நடவடிக்கை செய்தி

அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடற்படை நிவாரணக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட வெள்ளப் நிவாரண குழுக்கள், இன்றும் (2024 டிசம்பர் 01) தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

01 Dec 2024

ஐஸ் என்ற போதைப்பொருளை கடத்திச் சென்ற இலங்கையின் மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படை வழங்கிய புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றத்தின் விளைவாக, ஐஸ் என்ற போதைப்பொருளை (Crystal Methamphetamine) பெருமளவு ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகொன்றுடன் (01) இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் குழுவொன்று 2024 நவம்பர் 24 மற்றும் 25 திகதிகளில் இந்திய கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

29 Nov 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்றும் (2024 நவம்பர் 26) அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27 Nov 2024

மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 நவம்பர் 24 ஆம் திகதி கடற்படையின் மூன்று (03) நிவாரண குழுக்களை மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய பகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

25 Nov 2024

ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றியது

இலங்கை கடற்படையினருக்கும் மாலைதீவு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் பரிமாற்றத்தின் விளைவாக, 344 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் 124 கிலோகிராம் கொக்கேயின் போதைப் பொருள் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிப் படகுடன் ஐந்து சந்தேக நபர்கள் கடந்த 2024 நவம்பர் 23ம் திகதி மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Nov 2024

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்ப கடற்படையின் உதவி

இலங்கைக்கு தென்மேற்கு திசையில், காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 78 கடல் மைல் (சுமார் 144 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் இலங்கையில் பல நாள் மீன்பிடி படகொன்றில் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (2024 நவம்பர் 20) கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

20 Nov 2024

சுமார் 442,680 போதை மாத்திரைகள் கல்பிட்டியில் கைது

இலங்கை கடற்படையினர், இலங்கை பொலிஸாருடன் இணைந்து 2024 நவம்பர் 14 ஆம் திகதி கல்பிட்டி முசல்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு இலட்சத்து நாட்பத்தி இரண்டாயிரத்து அறுநூற்று எண்பது (442,680) போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

15 Nov 2024

ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கையில் போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற்படையினரால், இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (நவம்பர் 14 2024) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பேது, போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் ஆறு (06) சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் படகில் சுமார் 60 கிலோ கிராம் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதுடன், பல நாள் மீன்பிடிப் படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணை மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

14 Nov 2024

சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட 05 பேர் கடற்படையினரால் கைது

மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்கரைப் பகுதியில் 2024 நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து ஐம்பத்தைந்து (1055) கடலட்டைகளுடன், ஐந்து (05) சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

14 Nov 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2024 நவம்பர் 12) யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் பகுதிக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 Nov 2024