புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராமாதிபதி கலாநிதி கலபோட சிரி ஞானிசர தேரரின் வேண்டுகோளின் பேரில் நிர்மானிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்கா அலபாமாவின் பரமின்ஹேம் ரோட்டரி கிளப்பின் நிதி உதவியுடன் இலங்கை கடற்படையினரினால் நிர்மானிக்கப்பட்டது. அதன் படி கடற்படை உதவியுடன் கதிர்காமம் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட 9 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும். இது மூலம் இப் பகுதிக்கு வருகின்ற அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தங்களது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இது ஒரு வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமூகங்களிடையே நல்லிணக்கத்திற்கும் பங்களிக்கும்.