இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது இந்திய மீனவர்களையும் மூன்று மீன்பிடி இழுவைப் படகுகளையும் நேற்று 05ம் திகதி கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் அதிகாரிகளிடம் கல்பிட்டி பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக  கையளிக்கப்பட்டனர்.