சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை “செபல் ஐலண்ட்” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத பொருட்கள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் 02 படகுகளையும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்களுடன் ஒரு சோடி சுழியோடும் காலணிகள் , 2சுருக்கு மீன்பிடி வலைகள் 03 அதங்கு வலையல்கள் மற்றும் , சுழியோடி முகமூடியும் கைப்பற்றப்பட்டன.கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் திருகோணமலை துறை முக பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.