சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03 உள்நாட்டு மீனவர்கள் நேற்று 04ஆம் திகதி சவுத்பார் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘கஜபா’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஒரு படகும் தடைசெய்யப்பட்ட 19 டெடனேடர்,10 நூற்கள், ஒரு சோடி சுழியோடும் காலணியும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருட்களும் மன்னார் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.