சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களால் இரணதீவு  கடல் பரப்பில்  தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்களும் 02 படகும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 03 வலையும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் கிலினொச்சி கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.