கங்காராம விகாரையில் “புத்த ரஷ்மி” வெசாக் வலயம், திறந்து வைக்கப்பட்ட கடற்படை தளபதி பங்கேற்பு

2016 வெசாக் பௌர்ணமி தினத்தை காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் 21 ம் திகதி கொழும்பில் அமைந்துள்ள கங்காராம விகாரையில் “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி யமுனா விஜேகுணரத்ன திருமதியும் நேற்று 22 கலந்து கொண்டனர்.

அத்துடன் தாய்லாந்து அரசினால் இவ்விகாரைக்கு பரிசளிக்கப்பட்ட புனித தாய் ஜேட் புத்தர் சிலையை கடற்படை தளபதி வணங்கி வழிபட்டார். பின்னர் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் கடற்படை இசை குழுவிடன் கங்காராம விகாரையில் இருந்து சீமா மாலகய வரை பெரஹர மூலம் பேழை கொண்டு செல்லக்கப்பட்டது.

சமுக ஒருமைப் பாட்டு மற்றும் தீர்திருத்தம் அமைச்சர் ஏஎச்எம் பவுசி அவர்கள் உள்நாடு செளிநாடு  அதிகாரிகள் ரியர்அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க அவர்கள் உட்பட அதிகாரிகள் பலர் கடற்படை வீரர்கள் மற்றும் பக்தர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.