சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் மன்னார், தல்பாது கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி புள்ளி யிற்கு அண்மித்த கடலில் தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 3 உள் நாட்டு மீனவர்கள் நேற்று (15) கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு வள்ளமும் மற்றும் 3 தனியிளை வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைதுசெயயப்பட்டவர்களும்  பொருள்களும் மன்னார் மீன்பிடி உதவி இயக்குனரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

அதே தினம் மேலும் 2 உள் நாட்டு மீனவர்கள் சுக்கோடை கடலில் தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில், வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட காங்கேசன்துறை கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களால் கைதுசெய்யப்பட்டதுடன் 3 தனியிளை வலைகளும் கைப்பற்றப்பட்டன.  கைதுசெயயப்பட்டவர்களும்  பொருள்களும் யாழ்பாணம் மீன்பிடி உதவி இயக்குனரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.