குமண தேசியப் பூங்காவில் கடற்படையினர் சுத்தகரிப்பு நிகழ்ச்சி
 

தென்கிழக்கு கடற்படை பிரதேசத்தின் பானமையில் உள்ள கடற்படைக் கப்பல் மகானாக விற்குட்பட்ட கடற்படை வீரர்களினால் சுற்றுப்புற சுத்திகரிப்பு நிகழ்ச்சி ஒன்று நேற்று (18) நடாத்தப்பட்டது. தென்கிழக்கு கடற்படை பிரதேசத்தின் கட்டளைத் தளபதி கொமோடோர் சுமித் வீரசின்ஹ அவர்களின் வழிகாட்டலில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வின்போது ஒகந்தையிளிருந்து கும்புக்கன் ஓயா வரையான 23 கி.மி பிரதேசம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது.

இப்பிரதேசம் அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை வருடாந்த பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் விட்டுச் சென்ற குப்பை கூளங்களால் அசுத்தமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடற்படை வீரர்களின் முயற்சியால் இப்பிரதேசம் குறுகிய காலத்திற்குள் சுத்தமாக்கப்பட்டு முந்திய நிலைக்கு கொண்டுவரப்பட்டமை. பிரதி கட்டளைத் தளபதி கொமோடோர் சுதத் குருகுலசூரிய,அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தங்களின் முழு பங்களிப்பை வழங்கினர்.