அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 15 பேர் கடற்படையினரால் கைது
 

அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடிதத்தலில் ஈடுபட்ட 15 பேர் நேற்று (19) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் மண்டைதீவு பிரதேசத்திலுள்ள கடற்படை கப்பல் வேலுசுமண விட்குட்பட்ட கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டனர் . அத்துடன் 104 கடலட்டைகள், 7 சுளியயோடி முகமூடிகள், 6 சுழியோடி காலணிகள் மற்றும் ஒரு வள்ளம் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் பொருள்கள் யாழ்ப்பாண மீன்பிடி பரிசோதகரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டனர்.