இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண மற்றும் தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு இரண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்களான “ஜேஎம்எஸ்டிஎப் இனசூ மா” (JMSDF Inazuma) மற்றும் “ஜேஎம்எஸ்டிஎப் சுசுட்சுகி” (JMSDF Suzutsuki) இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வரவேட்பு அளிக்கப்பட்டது.

இம்மாதம் 25ம் திகதி நாடுதிரும்புவதற்கு முன் இக்கப்பல்கள் இலங்கை கடற்படை கப்பல்களுடன் பசேஜ் பயிட்சி ஒன்றிள் ஈடுபடவுள்ளது. இருநாட்டு கடற்படைகளுக்கிடையே தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் நட்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் மேட்கொள்ளப்படுகிறது.