“ஜேஎம்எஸ்டிஎப் இனசுமா” மற்றும் “ஜேஎம்எஸ்டிஎப் சுசுட்சுகி” ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

அண்மையில் (24), “ஜேஎம்எஸ்டிஎப் இனசுமா” மற்றும் “ஜேஎம்எஸ்டிஎப் சுசுட்சுகி” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண அடிப்படையில் வருகை தந்தன. எஸ்கோர்ட் பிரிவு நான்கின் தளபதி கெப்டன் அட்சுஹி மினாமி மற்றும் வருகை தந்துள்ள குறிப்பிட்ட கப்பல்களின் தளபதிகள், கட்டளைத் தளபதி சௌவ்ச்சிரோ தசிஹோ மற்றும் கட்டளைத் தளபதி நகாயமா ஆகியோர் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்தீர விஜேகுணவர்தன அவர்களை நேற்று (25) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது அவர்களிடையே இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் இந் நல்லெண்ண விஜயத்தினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்வின்போது இலங்கைக்கான ஜப்பான் தூதரக பாதுகாப்பு ஆலேசகர் கெப்டன் மொட்டோட்சுகு அவர்களும் கலந்து கொண்டார். குறித்த இக்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று 25ஆம் திகதி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.