புதிதாக நியமனம்பெற்ற ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

புதிதாக நியமனம்பெற்ற இலங்கைக்கான ஜப்பான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் அட்சுஹிரோ மொரோரே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (3) கடற்படைத் தலைமையகத்தில்  வைத்து சந்தித்தார். கடற்படைத் தளபதியுடனான இச்சந்திப்பானது பாதுகாப்பு ஆலோசகரின் முதல் உத்தியோகபூர்வ சந்திப்பாகும்.

இச்சந்திப்பின் போது  கடற்படைத் தளபதி  புதிதாக நியமனம்பெற்ற பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட பின் நடந்த  சினேக பூர்வமான கலந்துரையாடலின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறி கொள்ளப்பட்டன.