முதலாவது பொப்பி மலர் கடற்படைத் தளபதிக்கு அணிவிப்பு
 

பொப்பி மலர் தினத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை சங்கத்தின்  ஓய்வுபெற்ற கடற்படைக் கெப்டன் டீஏ விஜகுணவார்தன அவர்களினால் இன்று (4) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர  விஜேகுணரத்ன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறும்  வகையில் இடம்பெற்று வருகின்றது. இதேவளை, எமது தாய்  நாட்டில் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் மூலம் ஈட்டப்படுகின்ற வருமானம் உயிர்த்  தியாகம் செய்த படை வீரர்களது குடும்ப நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றது.