சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கட்டளையக திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் கப்பல் பட்டறை கடற்படையினர்   சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனைவர்களை கைது செய்தனர். குறிப்பிட்ட இம் மீனவர்கள் இன்று (5) சாம்பூர் கடற்பகுதியில் சட்டவிரோத தனியிழை மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர்.  

சந்தேக நபர்கள், 3 மீன்பிடி படகு மற்றும் சட்ட விரோத வலைகள் ஆகியவற்றை கடற்படையின் கட்டுப்பாட்டிற்கு  கொண்டு வந்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக  நபர்கள் மேலதிக விசாரனைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.