பாகிஸ்தான் விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹைல் அமான் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீன்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (8) சந்தித்தார். வருகை தந்த பாகிஸ்தான் விமானப்படை தளபதிக்கு மரியாதை அணிவகுப்பும் ஒன்றும் அங்கு அளிக்கப்பட்டது.

இரு தளபதிகளுக்குமிடைலான சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் வரலாற்று தொடர்புகள் பற்றியும் பரஸ்பர நலன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வின்போது கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ, பணிப்பாளர் நாயகங்கள் உட்பட தலைமையக உயர் அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள், பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் ராஜில் இர்ஷாத் கான் ஆகியோரும் கலந்துகொண்டனர். மேலும் இச்சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.