இலங்கை கடலில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது
 

அனலைத்தீவிற்கு மேற்கே இலங்கை கடல்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு இந்திய மீன்பிடி படகையும் இன்று (9) கைதுசெய்ய இலங்கை கடற்படை, கரையோர பாதுகாப்பு படைக்கு உதவியளித்தது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் படகும் யாழ்ப்பாணம் கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.