சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் கடற்படை வீரர்களால் இறங்கேனி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (8) கைதுசெய்யப்பட்டனர். அவர்களுடன் கண்ணாடியிழை படகுகள் இரண்டும், சுளியோடிகள் பயன்படுத்தும் முகமூடி ஒன்றும், பாதணிகள் ஒரு சோடியும், ஒட்சிசன் சிலிண்டர்கள் இரண்டும் தடைசெய்யப்பட்ட மீன் பிடி வலை ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெயயப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் திருகோணமலை கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.