கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை காப்பாற்ற கடற்படை உதவி
 

மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட விரைவு  தாக்குதல் படகுகளான பி 417 மற்றும் பி 474 யின் கடற்படை வீரர்கள், இலங்கைக்கு மேற்கு கடலில் இயந்திர கோளாறு காரணமாக செயலிழந்து கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகையும் நேற்று (ஆகஸ்ட் 8) மீட்டனர்.

திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட பின் அம்மீனவர்களுக்கு உணவும் முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும் பழுதடைந்திருந்த அம்மீனவர்களின் படகின் திருத்த வேலைகள் உடனடியாக முடக்கிவிடப்பட்டதுடன் சர்வதேச கடல் எல்லையில் அவர்களை இன்று விடுவிப்பதற்கான (ஆகஸ்ட் 10) நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.