4.5 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியின் வீரர்கள் புத்தளம் பொலிசாருடன் இணைந்து இரு வேறு பகுதிகளில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை நேற்று (11). கைது செய்தனர்.

இதனடிப்படையில், நாவத்தேகம பகுதியில் வைத்து 3.5 கிலோ கஞ்சவுடன் சந்தேக நபர் ஒருவரும், புத்தளம் சீமாவெலி பகுதியில் 1 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் மேலதிக விசாரணைகளுக்காக ஆணமடுவை மற்றும் புத்தளம் ஆகிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.