மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி பங்கேற்பு

ஒய்வு பெற்ற கொடி தரவரிசை அதிகாரிகளின் சங்கத்தினால் நேற்று (11) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் திருமதி யமூனா விஜேகுணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நினைவுப்பேருரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

மேற்படி நிகழ்வுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாரச்சி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற அட்மிரல் தயா சந்தகிறி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டீ சில்வா ஒய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மறைந்த தேசமானிய ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.