பேச்சப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பரிசில்கள் வழங்கி வைப்பு

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முதலாவது தடைவயாக அனைத்து கடற்படை கட்டளைகளின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் பேச்சுப் போட்டி ஒன்று நடைபெற்றது. குறிப்பிட்ட இப்போட்டி சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகளின் பேச்சுத் திறனை விருத்தி செய்யும் வகையில் நடத்தப்பட்டது.

மேலும், வெற்றி பெற்ற போட்டியாளர்கள் ஆகஸ்ட்(12) திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதியிடமிருந்து தமக்கான பரிசில்களை பெற்றுக் கொணடனர். இதன் பிரகாரம், கீழ் குறிப்பிடப்படும் கடற்படை அதிகாரிகள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்டனர். அத்துடன் குறித்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு முறையே ரூபா.100.000.00, 75,000.00 மற்றும் 50,000.00 பெறுமதியான பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்படை பிரதானி, ரியர் அடமிரல் சிறிமெவன் ரணசிங்க , பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெற்றியாளர்கள் விபரம்

சிரேஷ்ட நிலைப் பிரிவு

  1. லெப்டினன்ட் கொமாண்டர் சீஆர்பீ வலாகுலுகே
  2. லெப்டினன்ட் கொமாண்டர் எஸ்ஏசீஆர் குலத்தூங்க
  3. கெமேடேர் பீஜீஜேசீ சமரநாயக்க

இளநிலைப் பிரிவு

  1. லெப்டினனட் கேஎம்ஏஎல் பண்டார
  2. லெப்டினனட் டப்டபகேஎம்ஏஎல் வேத்தேவ
  3. லெப்டினனட் டப்டீடீ லக்சான்