இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” கொழும்பு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” இன்று (18 ஆகஸ்ட்) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் ஆனந்த் பிரகாஷ் பதோலா, மேற்கு கடற்படை கட்டளை பிரதேச தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களை கொழும்பிலுள்ள மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். மேலும் இந்நிகழ்வை நினைவுகூறுமுகமாக நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இம்மாதம் 20 ம் (ஆகஸ்ட்)  திகதி வரை இலங்கையில் “சமர்த்” தரித்திருக்கும் அதே வேளை அதன் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் சிநேகபூர்வ கரப்பந்தாட்ட போட்டி உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும் உள்ளனர்.