கடலில் தத்தளித்த 05 மீனவர்களை கடற்படையினர் மீற்பு
 
 

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறிய பாசெஸ் கலங்கரை விளக்கத்திலிருந்து 168 கடல் மைல்களுக்கப்பால் கடலில்தத்தளித்த05 இலங்கை மீனவர்கள் “எம்வீ ஈடர்னிட்டி” எனும் வணிகக் கப்பலினால் 2016.ஆகஸ்ட்.18 மீட்கப்பட்டு சிறிய பாசெஸ் கலங்கரை விளக்கத்திற்கு 5 கடல் மைல் தொலைவில் வைத்து தெற்கு கடற்படை பிரதேசத்தின் கடற்படை வேக தாக்குதல் படகுகளான பீ 484 மற்றும் பீ 472 க்கு நேற்று (ஆகஸ்ட்.19) கையளிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து குறித்த மீனவர்கள் காலி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.