இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்திய அமைதிப் படை சமாதியில் அஞ்சலி
 

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜெனரல் (இளைப்பாறிய) விஜய் குமார் சிங் அவர்கள் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை சமாதியில் இன்று (ஆகஸ்ட் 26) மலர் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌ. வய் கெ சின்ஹா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உட்பட கடற்படை அதிகாரிகளும் வீரர்களும் உயிர் நீத்த இந்திய சமாதனப் படை வீரர்களை நினைவு கூறும் இந்நிகழ்வில் கலந்து இலங்கையில் அமைதி காக்கும் பணியின் போது உயிர் நீத்த இந்திய இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவித்தனர்.