கண்டக்குளி கடல் பரப்பில் 25 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிப்பு
 

ஒரு மீனவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்கள், கண்டக்குளி கடல் பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த 25 கிலோ கேரள கஞ்சாவை இன்று (ஆகஸ்ட் 26) கைப்பற்றினர். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சாவே இவ்வாறு கடத்தல்காரர்களினால் கைவிடப்பட்டிருக்கலாம் என கடற்படை சந்தேகிக்கிறது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா கற்பிட்டி பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.